சினிமா செய்திகள்

ஆஸ்கார் விருதுகள் வழங்க்கும் விழா: தேதி, நேரம் அறிவிப்பு!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் என்றும் இந்திய நேரப்படி அன்றைய தினம் 05.30 முதல் 08.30 மணி வரை ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

93வது ஆஸ்கார் விருதுக்கான படங்களின் பரிந்துரைகள் ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இந்த பரிந்துரை பட்டியலில் சூரரைப்போற்று திரைப்படம் வெளியேறியது என்பது சோகமான தகவலாகும்.

இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவர் நின் ஜோன்ஸ் அவர்களும் தொகுத்து வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால் இந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையில் தான் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட இருப்பதாகவும் ஆனாலும் இந்த நிகழ்ச்சி நேரடியாக உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படும் என்பதால் உலகில் உள்ள அனைத்து சினிமா ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியை நேரடியாக சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக காணலாம் என்று ஆஸ்கார் விருது வழங்கும் விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version