தமிழ்நாடு

டிடிவி தினகரனை ஜோக்கராக்கிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!

Published

on

அதிமுகவில் தற்போது இருப்பவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு வந்துவிடுவார்கள் எனவும் அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனித்துவிடப்படுவார்கள் எனவும் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி டிடிவி தினகரன் கூறினார். எடப்பாடி பழனிசாமியின் அனைத்துச் செயல்பாடுகளும் தோல்வியில் முடியும் எனவும் விமர்சித்தார் தினகரன்.

தினகரனின் இந்த கருத்துக்கு அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பதிலடி கொடுத்தார். அப்போது, சில்லறைக் கட்சிகள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள், அதிமுகவில் இருப்பவர்கள் எல்லாம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு வருவார்கள் என்று தினகரன் சொல்வது 2018-ஆம் ஆண்டின் மிகப் பெரிய ஜோக் என்றார்.

மேலும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்வதில்லை என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்தார். இதனையடுத்து பாஜக சொல்வதை அதிமுக பின்பற்றுவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியமைத்தபோது திமுக கூட்டணியில் இருந்தது. அப்போது காவி நிறம் திமுகவுக்குத் தெரியவில்லையா? இன்றைக்குத்தான் தெரிகிறதா? என்ற கேள்வியை பதிலாக அளித்தார்.

Trending

Exit mobile version