சினிமா செய்திகள்

ஒருதலை ராகம்’ பட தயாரிப்பாளர் காலமானார்: டி ராஜேந்தர் இரங்கல்

Published

on

கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான ’ஒரு தலை ராகம்’ என்ற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இப்ராஹிம் காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சங்கர், ரூபா நடிப்பில் டி ராஜேந்தர் இசையில் உருவான திரைப்படம் ’ஒரு தலை ராகம்’. இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் இப்ராஹிம் வயது மூப்பு காரணமாக உடல்நலம் இன்றி இருந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தனது முதல் பட தயாரிப்பாளர் காலமானதை அடுத்து டி ராஜேந்தர் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒரு தலை ராகம் எனது முதல் படம். அந்த படத்தின் தயாரிப்பாளர் இப்ராகிம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் இடியாய் பாய்கிறது. இதனால் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். என்னை திரை உலகிற்கு அரங்கேற்றம் செய்தவர் அவர்தான். என் திரையுலக படகை கரை சேர்த்தவர், இன்று மறைந்துவிட்டார். இந்த உலகை விட்டுப் பிரிந்து விட்டார். கண்ணீரால் என் கண்கள் நனைகிறது. இன்று என் மனம் கடந்த காலத்தில் அவரோடு வாழ்ந்த காலத்தை நினைக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version