சினிமா செய்திகள்
இந்தியாவின் முதல் ஐந்தாம் பாக திரைப்படம்: நடித்த சூப்பர் ஸ்டார் யார் தெரியுமா?
இந்திய சினிமாவில் உருவாகும் முதல் ஐந்தாம் பாக திரைப்படத்தில் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் உள்பட பல இந்திய திரைப்படங்களில் அதிக பட்ச மூன்று அல்லது நான்கு பாகங்கள் மட்டுமே திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் முறையாக ’ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு’ என்ற திரைப்படம் ஐந்தாம் பாகம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் ’ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு’ என்ற திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 1988ஆம் ஆண்டு வெளியானது. இதனை அடுத்து 89ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும், 2004ஆம் ஆண்டு மூன்றாம் பாகமும், 2005ஆம் ஆண்டு நான்காம் பாகம் வெளியானது என்பதும் இந்த நான்கு பாகங்களிலும் சேதுராம ஐயர் என்று சிபிஐ அதிகாரி கேரக்டரில் மம்முட்டி நடித்திருந்தார் என்பதும் நான்கு பாகங்களும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 பாகங்களுக்கும் கதை திரைக்கதை எழுதிய எஸ்என் சுவாமி என்பவர் இந்த படத்திற்கும் கதை எழுதுகிறார் என்பதும் மது என்பவர் இந்த படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு’ திரைப்படத்தின் நான்கு பாகங்கள் போகவே இந்த ஐந்தாம் பாகம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.