தமிழ்நாடு
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் சான்றிதழ்: தேர்வுத் துறையின் முக்கிய அறிவிப்பு
![cbse students63 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/cbse-students63.jpeg)
10ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான அசல் சான்றிதழ் வழங்கும் முக்கிய அறிவிப்பை அரசு தேர்வுத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2020-21 ஆம் கல்வி ஆண்டின் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் தற்காலிக சான்றிதழைக் இணையதளம் மூலம் டவுன்லோட் செய்து கொண்டு அந்த சான்றிதழின் அடிப்படையில் மாணவர்கள் பிளஸ் 1 அல்லது பாலிடெக்னிக் வகுப்புகளில் சேர்ந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி மாணவர்கள் தற்காலிக சான்றிதழ் மூலம் அடுத்தகட்ட படிப்பில் தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விரைவில் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான அசல் சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் தேதி அறிவிக்கப்படும் என செய்திகள் வெளியானது. அதன் அடிப்படையில் சற்றுமுன் அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி 2020-21 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அக்டோபர் 4ஆம் தேதி முதல் தங்களது அசல் சான்றிதழ்களை தாங்கள் படித்த பள்ளியில் நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் அசல் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.