Connect with us

தமிழ்நாடு

திமுக அரசின் வழக்குகளை எதிர்கொள்ள 6 பேர் கொண்ட ‘சட்ட ஆலோசனை குழு’: அதிமுக அதிரடி

Published

on

திமுக ஆட்சி தொடங்கி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் களின் மீதான வழக்குகள் பாய தொடங்கி விட்டன ஏற்கனவே எம்ஆர் விஜயபாஸ்கர் வேலுமணி ஆகியோர்களின் வீடுகளில் ரெய்டு நடந்த நிலையில் மேலும் சில பிரபலங்களின் வீடுகளில் ரெய்டு நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டிஜிபி கந்தசாமி அவர்கள் முடுக்கி விடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவும் தயாராகி வருகிறது திமுக அரசு தொடுக்கும் வழக்குகளை எதிர்கொள்வதற்காக அதிமுக தரப்பில் இருந்து 6 பேர் கொண்ட சட்ட ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் குழுவில் ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தளவாய்சுந்தரம், சிவி சண்முகம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை மற்றும் பாபு முருகவேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தில்‌, பல்வேறு நிலைகளில்‌ பணியாற்றி வரும்‌ நிர்வாகிகள்‌ பலர்‌ மீது, ஆளும்‌ கட்சியினரின்‌ தூண்டுதலால்‌, பழிவாங்கும்‌ எண்ணத்தோடு பொய்‌ வழக்குகள்‌ புனையப்படுவது நாளுக்கு நாள்‌ அதிகரித்த வண்ணம்‌ உள்ளது. கழகப்‌ பணிகளிலும்‌, மக்கள்‌ பணிகளிலும்‌, அல்லும்‌ பகலும்‌ அயராது ஈடுபட்டு வரும்‌ கழகத்தைச்‌ சேர்ந்த அனைவருக்கும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ என்றென்றும்‌ பாதுகாப்பு அரணாகத்‌ திகழும்‌ என்பதை உறுதிபட தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

அரசியல்‌ காழ்ப்புணர்ச்சியால்‌, திமுக-வினரின்‌ தூண்டுதலால்‌ கழகத்தினர்‌ மீது தொடுக்கப்படும்‌ பொய்‌ வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்‌ வகையில்‌, கழகத்தின்‌ சார்பில்‌ “கழக சட்ட ஆலோசனைக்‌ குழு” கீழ்க்கண்டவாறு அமைக்கப்படுகிறது.

ஜெயகுமார், தளவாய் சுந்தரம், சிவி சண்முகம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை மற்றும் பாபு முருகவேல் ஆகியோர்கள் சட்ட ஆலோசனை குழுவில் இருப்பார்கள். நம் அரசியல் எதிரிகளால் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகளை பதிவு செய்யும்போது அத்தகையவர்களுக்கு கழக சட்ட ஆலோசனைக்குழு இந்த வழக்குகளுக்கு அனைத்து சட்ட உதவிகளையும் முழுமையாக செய்யும் எனவே கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட குழுவினரை தொடர்பு கொண்டு உரிய தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா15 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!