தமிழ்நாடு
7 மாவட்டங்களில் கனமழை, 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அதில் மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், திருவள்ளூர், மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தீபாவளி அன்று உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த நிலையில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் இந்த மூன்று மாவட்டங்களிலும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
7 மாவட்டங்களில் கன மழையும் 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.