தமிழ்நாடு
தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு: ஆரஞ்ச் அலர்ட் விடுத்ததால் பரபரப்பு!
தெற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் அது தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை நீடிக்கும் என்றும் குறிப்பாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 1ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள அரசுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆயத்தமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.