இந்தியா
6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பதும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்று ஐந்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தை போலவே கேரளாவிலும் கனமழை பெய்து வருவதையடுத்து அங்கு வானிலை ஆய்வு மையம் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் ஆரஞ்ச் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் கேரளாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கேரளாவில் மிக கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்பதும் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கேரளாவுக்கு கனமழைக்கு வாய்ப்பு எனவும் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளதால் பொது மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.