தமிழ்நாடு
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை மையம்
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனை அடுத்து ஒரு சில மாவட்டங்களுக்கு தினந்தோறும் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் சென்னை உள்பட ஏழு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று மாலை மிக கனமழை பெய்யும் என நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இன்னும் ஒரு சில மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து ஆரஞ்சு அலர்ட் எடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட 4 மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆயத்தமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.