தமிழ்நாடு

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Published

on

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்துக்கொள்கிறோம்/ குறிப்பாக சென்னை உள்பட வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மிக அதிக கனமழை பெய்து வருவதால் எங்கும் வெள்ளப்பெருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது 14 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகை, திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 

 

seithichurul

Trending

Exit mobile version