தமிழ்நாடு
பிரதமரை சந்தித்தப் பின் முதல் முறையாக வாய் திறந்து ஓபிஎஸ் – ‘ஓப்பன் டாக்’ பேட்டி!
டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்து உள்ளனர்.
நேற்றுப் பிரதமரைச் சந்தித்தப் பின்னர் கூட்டாக பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எடப்பாடி மட்டும் பேசும்போது, ‘கர்நாடகத்தில் மேகதாது அணைக் கட்டக் கூடாது என்று பிரதமரை வலியுறுத்தினோம். அப்படி கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என்பதை எடுத்துக் கூறினோம்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.
அதிமுக மிக வலுவாக உள்ளது. அத்தனைத் தொண்டர்களும் எங்கள் பக்கம் இருக்கின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 மாதங்கள் தான் ஆகிறது. அதனால் இப்போதைக்கு அந்த ஆட்சியைப் பற்றி பேச விரும்பவில்லை’ எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் என்றோம், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அதிமுக வட்டாரம் கூறுகிறது.
இந்த சந்திப்புகள் குறித்து இன்று பேட்டியளித்த ஓபிஎஸ், ‘பிரதமரை சந்தித்துத் தமிழக நலன்கள் பற்றி மட்டுமல்ல… அனைத்து நலன்கள் பற்றியும் பேசியுள்ளோம்’ என்று சூசகமான கருத்தைக் கூறியுள்ளார்.