தமிழ்நாடு

சசிகலா பற்றிய கேள்வி – ஓபிஎஸ் நறுக் பதில்

Published

on

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியை மீண்டும் கைப்பற்றுவேன் என்று வெளிப்படையாக தொடர்ந்து கருத்து கூறி வருகிறார்.

அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்களும் இதனால் குஷியில் உள்ளார்கள். மேலும் கடந்த சில வாரங்களாக திமுக அரசு, அதிமுக அமைச்சர்கள் மீது தொடர்ந்து ரெய்டு நடத்தி வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனால் கலக்கத்தில் உள்ள அதிமுக தலைமை, டெல்லி சென்று மோடி மற்றும் அமித்ஷாவை நேரில் பார்த்து உதவி கோரியுள்ளது.

இந்நிலையில் சசிகலா பற்றிய கேள்விக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ‘ஒரு தனிப்பட்ட குடும்பமோ, ஒரு தனி நபரோ கட்சியில் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பது தான் எங்களின் நிலைப்பாடு. கழகத்தின் மொத்த தொண்டர்களும் எங்கள் பின்னால் உள்ளார்கள். இந்த நிலை தொடரும்.

என்ன முயற்சி நடந்தாலும் அதிமுகவை இனி யாராலும் கைப்பற்ற முடியாது’ என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version