தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா: ஓபிஎஸ் ஆதரவு என செய்தி!

Published

on

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அதிமுக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக ஓபிஎஸ் ஆதரவு என நமது எம்ஜிஆர் நாளேடு திடீரென செய்தி வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த செய்தி கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த செய்தி என்பதும் அந்த செய்தியை தான் நமது எம்ஜிஆர் நாளேடு தற்போது புதிய செய்தி போல் குறிப்பிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஊடகங்களில் வெளியான செய்தியில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தான் முழு ஆதரவு தெரிவிப்பதாக அன்றைய முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் தமிழகத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிறைவுசெய்ய சசிகலாவை அதிமுகவினர் நேரில் சென்று சந்தித்து தலைமை ஏற்குமாறு அழைப்பு விடுத்தோம் என்றும், அந்த அழைப்பை ஏற்று அவரும் ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் இதனால் தாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த இந்த செய்தியை தற்போது நமது எம்ஜிஆர் நாளேடு புதிய செய்தி போல் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, அதிமுகவில் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது

author avatar
seithichurul

Trending

Exit mobile version