தமிழ்நாடு

இனி நல்லநேரம், கெட்டநேரம் யாருக்கு என்று தெரியும்: ஓபிஎஸ் மகன் அதிரடி!

Published

on

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரனை சந்தித்து பேசியதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான தங்க தமிழ்செல்வன் கூறியிருந்தார். இதற்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பதிலளித்துள்ளார்.

தங்க தமிழ்செல்வன் தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்று நடத்திய விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக பன்னீர்செல்வம், டிடிவி தினகரனின் நண்பரிடம் தினகரனை சந்திக்க நேரம் கேட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி கோட்டூர்புரம் பில்டர் இல்லத்தில் தினகரனை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.

ஓபிஎஸ், தினகரன் சந்திப்புக்கு ஆதாரம் உள்ளதாக தக்க தமிழ்செல்வன் கூறியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், குருபெயர்ச்சி நடந்துள்ளதால் இனி நல்லநேரம், கெட்டநேரம் யாருக்கு என்று தெரியும் எனக் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version