தமிழ்நாடு
ஆறுமுகச்சாமி ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலா குறித்து ஓபிஎஸ் கூறிய திடுக்கிடும் தகவல்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஜெயலலிதா மற்றும் சசிகலா குறித்து திடுக்கிடும் தகவல்களை ஓ பன்னீர்செல்வம் கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்திடம் நேற்று ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜரானார் என்பதும் அவர் 78 கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் அளித்ததாக கூறப்பட்டது
இந்த நிலையில் இன்று சசிகலாவின் வழக்கறிஞர், ஓபிஎஸ் அவர்களை குறுக்கு விசாரணை செய்ததாக கூறப்படுகிறது. இந்த குறுக்கு விசாரணையின்போது ஜெயலலிதாவின் மரணம் குறித்து தனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை என்றும் ஆனால் பொதுமக்கள் கருத்துக்காகவே தான் விசாரணைக்கு உத்தர விட்டதாகவும் அவர் தெரிவித்தார்
மேலும் சசிகலா மீது தனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பு மரியாதை உண்டு என்றும் அவர் சசிகலா வழக்கறிஞரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்