தமிழ்நாடு

எந்த விபரமும் எனக்கு தெரியாது: ஆறுமுகச்சாமி ஆணையத்திடம் ஓபிஎஸ் பதில்!

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் சம்பந்தமாக எந்த விவரமும் தனக்கு தெரியாது என்றும் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது கூட தனக்கு தெரியாது என்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்து வருகிறது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு சமீபத்தில் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் தற்போது மீண்டும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதிஅ அடுத்து மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை இளவரசியிடம் விசாரணை செய்த ஆறுமுகசாமி ஆணையம், தற்போது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களிடமும் விசாரணை செய்துள்ளது.

இந்த விசாரணையின்போது ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை தரப்பட்டது என்ற விபரம் தனக்கு தெரியாது என்றும், எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற விவரமும் தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் 2016 ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் கூட தனக்கு தெரியாது என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version