தமிழ்நாடு

தினகரன், ஓபிஎஸ் சந்திப்பு: அதிரடி அரசியல் திருப்பம்!

Published

on

தமிழக அரசியலில் எதிரும், புதிருமாக உள்ள டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து பேசியதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

தங்க தமிழ்செல்வன் தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்று நடத்திய விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக பன்னீர்செல்வம், டிடிவி தினகரனின் நண்பரிடம் தினகரனை சந்திக்க நேரம் கேட்டதாக தெரிவித்தார்.

மேலும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி கோட்டூர்புரம் பில்டர் இல்லத்தில் தினகரனை சந்தித்து பேசிய பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு ஆட்சியை மாற்றுவோம் என கூறியதாக தங்க தமிழ்செல்வன் அந்த நிகழ்ச்சியின் போது தெரிவித்து தமிழக அரசியலில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஓபிஎஸ், தினகரன் சந்திப்புக்கு ஆதாரம் உள்ளதாக தக்க தமிழ்செல்வன் கூறியுள்ளது தேர்தல் நெருங்கி வருன் இந்த நேரத்தில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அதிமுக வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அடுத்தடுத்து தினகரன் தரப்பில் இருந்து மேலும் பல ரகசியங்கள் கசியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version