Connect with us

தமிழ்நாடு

தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஓபிஎஸ் விளக்கம்!

Published

on

தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென 50-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை ஜெயிக்க வைக்கவே இந்த முயற்சி நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் ஓபிஎஸ் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

தேனி மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தலின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி கம்மவார் கல்லூரியில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கல்லூரியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 50-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்து இறங்கும் தகவல் அறிந்த திமுக, காங்கிரஸ், அமமுகவினர் அங்கே உடனடியாக குவிந்தனர்.

இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் வெற்றிக்காக மோசடி செய்வதற்காகவே இந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அமமுகவினர் குற்றம் சாட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹுவிடமும் முறையிட்டனர்.

இந்நிலையில் ஒரு சில இடங்களுக்கு மறு வாக்குப்பதிவு நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று ஓபிஎஸ் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், தேனிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளித்துள்ளது.

ஒப்புகை சீட்டுக்களை எடுத்துவிட்டு வாக்குப் பதிவு நடந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு வாக்குச் சாவடிகளிலும் ஏஜெண்டுகள் ஒப்புதல் தந்ததனால் ஒப்புகை சீட்டுகளை எடுக்காமலேயே வாக்குப் பதிவு நடத்தியுள்ளார். அதனால்தான் அங்கு மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. வேறு எந்த தவறுகளும் நடப்பதற்கு அங்கு இடமில்லை என்றார்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!