தமிழ்நாடு

இந்த கேள்விக்கு மட்டும் பதிலே சொல்லாத ஓ.பன்னீர்செல்வம்.. என்ன காரணம்!

Published

on

சென்னை: டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு மட்டும் பதில் அளிக்கவில்லை.

டிடிவி தினகரனின் புகார்களுக்கு பதில் அளிக்கும் வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் நேரம் கேட்டு இருந்தார். கடந்த வாரம் தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் நேரம் கேட்டார். எடப்பாடி ஆட்சியை கலைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். ஆனால் இந்த சந்திப்பு நடக்கவில்லை, என்று கூறினார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் ஒருவருடம் முன் சந்திப்பு நடந்ததை ஒப்புக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், இந்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லவே இல்லை.

ஒருவாரம் முன் தினகரனை சந்திக்க அழைப்பு விடுத்தாரா, அப்பாயிண்ட்மெண்ட் கேட்டாரா என்று ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளிக்கவில்லை. இந்த ஒரு கேள்விக்கு மட்டும் இன்னும் பதில் கிடைக்கவில்லை.

seithichurul

Trending

Exit mobile version