தமிழ்நாடு

அலைகடல் ஓய்வதுமில்லை, அதிமுக சாய்வதுமில்லை: விஜயபாஸ்கர் ரெய்டு குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ்!

Published

on

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர் என்பதும், ஒரே நேரத்தில் 43 இடங்களில் சோதனை நடந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய்பாஸ்கர் வீட்டில் நடைபெற்று வரும் சோதனை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘அலைகடல் ஓய்வதுமில்லை, அதிமுக சாய்வதில்லை என்றும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கழக அமைப்புச்‌ செயலாளரும்‌, புதுக்கோட்டை வடக்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளரும்‌, முன்னாள்‌ அமைச்சருமான டாக்டர்‌ அவர்கள்‌ தொடர்புடைய இடங்களிலும்‌, அவரது உறவினர்கள்‌ வாழும்‌ வீடுகளிலும்‌ லஞ்ச ஒழிப்புத்‌ துறை சோதனை என்ற பெயரில்‌ திமுக அரசு, தனது பழிவாங்கும்‌ உணர்ச்சிகளை மீண்டும்‌ பகிரங்கப்படுத்தி, வக்கிரநடவடிக்கைகள்‌ மூலம்‌ தற்காலிசு மகிழ்ச்சியைத்‌ நேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ பொன்விழா கொண்டாடி வரும்‌ எழுச்சிமிகு தருணத்தில்‌, நேற்று (17:10.202) தலைநகர்‌ சென்னையிலும்‌, மாநிலத்தின்‌ மற்ற பகுதிகளிலும்‌ நடைபெற்ற உற்சாகமான விழாக்களைக்‌ கண்டு மனம்‌ பொறுக்கு முடியாத திமுக, விடிந்தவுடன்‌ காவல்‌ துறையை ஏவிலிட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில்‌ கோரத்‌ தாண்டவம்‌ ஆடிக்கொண்டிருக்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ ஆழம்‌ காண முடியாத அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம்‌; இந்த இயக்கம்‌ திமுக-வின்‌ முயற்சிகளால்‌ முடங்கிடவோ முடியாமற்போகவோ, ஒய்ந்து, சாயப்போவது இல்லை.

எத்தனை கழக நிர்வாகிகள்‌ மீது என்னென்ன வழக்குகள்‌ போட்டாலும்‌, அவதூறு பரப்பினாலும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ எதிர்காலத்தில் அடையப்போகும்‌ வெற்றிகளை யாராலும்‌ தடுத்த நற்திவிட முடியது என்பதைத்‌ தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version