தமிழ்நாடு

தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிசாமி அனுமதி!

Published

on

எதிர்கட்சி தலைவரை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று காலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல்வராக இருந்தபோது சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதனை அடுத்து அவர் வீடு திரும்பினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த அறுவைசிகிச்சை சம்பந்தமாக இன்று மீண்டும் பரிசோதனை செய்வதற்காக அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள் என்றும் அதன் பிறகு இன்று மதியம் அல்லது மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் அவரது உடல் நலம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Trending

Exit mobile version