தமிழ்நாடு

ஆளுனர் பதவியேற்பு விழா: எடப்பாடி பழனிச்சாமிக்கு 8வது வரிசையில் இருக்கை!

Published

on

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அவர்கள் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே. இதனை அடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி என்பவர் நியமனம் செய்யப்பட்டார் என்பதும் அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வந்தபோது அவருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தமிழகத்தின் 25வது ஆளுநராக இன்று ஆர்.என்.ரவி அவர்கள் பதவி ஏற்க உள்ளார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் தமிழக சட்டமன்ற எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஆளுநர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எட்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இன்று ஆளுனராக ஆர்.என்.ரவி பதவி ஏற்ற பின்னர் செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version