தமிழ்நாடு

திறந்தவெளி திரையரங்கம், பொதுஇடங்களில் இலவச வைஃபை: தமிழக பட்ஜெட் சிறப்பம்சங்கள்!

Published

on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் தாக்கல் செய்தார். மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமான சிலவற்றை கீழே பார்க்கலாம்.

#image_title

* திறன்மிக்க நிதி மேலாண்மைக்கு சான்றாக, மத்திய அரசை காட்டிலும், நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம். வருவாய் பற்றாக்குறை 62,000 ஆயிரம் கோடியில் இருந்து 30,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

* இலங்கை தமிழர்களுக்கு 3,949 வீடுகள் 223 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

* முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும்.

* அனைத்து மாவட்டங்களிலும் 10 கோடி ரூபாய் செலவில் புத்தகத்திருவிழா நடத்தப்படும்.

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீண்ட கால 12 வெள்ள தடுப்பு பணிகள் 434 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* நகர்புற உள்ளாட்சிகளில் 1,424 கிலோ மீட்டர் மண்சாலைகள் தரமான சாலைகளாக மேம்படுத்தப்படும்

* ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு தயாராக 25,000 ரூபாய் வழங்கப்படும்.

* கோவையில் 9,000 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

* சென்னையில் வெள்ள பாதிப்பை குறைக்க 320 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* 1,000 கோடி ரூபாய் செலவில் வடசென்னை வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

* தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் இந்த திட்டம் முதல்வரால் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 1000 புதிய பஸ்கள் வாங்க 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* பொது விநியோகத்திட்டத்திற்கு 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தீவுத்திடலில் 30 ஏக்கர் பரப்பில் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட வசதிகளை அமைக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* சென்னை தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சியில் முக்கிய பொதுஇடங்களில் இலவச வைஃபை இணையதள சேவை வழங்கப்படும்.

* புதிதாக சென்னை, கோவை. ஓசூரில் தொழில்நுட்ப நகரங்கள் அமைக்கப்படும்.

* ஈரோடு, நெல்லையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

* கிராமப்புறங்களில் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் நீர் நிலைகள் புதுப்பிக்கப்படும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version