தமிழ்நாடு

புதுவையில் அதிமுகவை பழிவாங்கியதா பாஜக? வெறும் 3 தொகுதிகள் தான்!

Published

on

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்து உள்ள பாஜக 40 தொகுதிகள் வரை கேட்டது என்பதும் ஆனால் அந்த கட்சிக்கு கிடைத்தது வெறும் 20 தொகுதிகள் தான் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தமிழகத்தில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததை அடுத்து அதிமுகவை பாஜக புதுவையில் பழி வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. புதுவையில் அதிமுக, பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் அதிமுகவுக்கு வெறும் மூன்று தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தற்போது புதுவையில் அதிமுகவுக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால் அதைவிட குறைவாக மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மேலிடத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அதிக தொகுதிகள் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ’கிடைக்கும் இடங்களை வாங்கிக் கொள்ளும்படி புதுவை அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாததால் இந்த கூட்டணியில் இருந்து விலகிய பாமக, தனித்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version