உலகம்
கொரோனா வைரஸ் உஹான் பரிசோதனைக் கூடத்திலிருந்து பரவியதா?- பணியாற்றிய விஞ்ஞானி ஓப்பன் டாக்
![Scientist - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/06/Scientist.jpg)
உலகையே கடந்த ஓன்றரை ஆண்டுகளாக தன் பிடிக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 தொற்று, சீனாவின் உஹான் என்கிற பகுதியில் இருக்கும் பரிசோதனைக் கூடத்திலிருந்துப் பரவியதாக பலர் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.
இது குறித்து உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத போது, இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றை உலகில் கசியவிட்டதாக குற்றம் சுமத்தப்படும் உஹானில் உள்ள ‘உஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி’ பணி செய்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் ஆண்டர்சன் என்னும் விஞ்ஞானி, குற்றச்சாட்டு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு இறுதி வரை உஹான் கூடத்தில் பணி செய்த ஒரேயொரு வெளிநாட்டு விஞ்ஞானி டேனியல் தான் எனப்படுகிறது. அவர், ‘உலகில் உள்ள அனைத்துப் பரிசோதனைக் கூடங்கள் போலவும் மிகவும் பாதுகாப்பானது தான் உஹான் கூடமும். அங்கிருந்து ஒரு வைரஸ் தொற்று பரவியது என்று கூறுவதை நான் நம்பவில்லை. அதே நேரத்தில் அப்படி பரவியிருக்க வாய்ப்புள்ளது. அது குறித்து முறையான விசாரணைகள் செய்யப்பட்டு உண்மை வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.