இந்தியா

தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் இனி தேர்வு இப்படித்தான்: அதிரடி அறிவிப்பு!

Published

on

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடி தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது மாணவர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆன்லைனில் வகுப்புகள் நடத்தி விட்டு நேரடி தேர்வு நடத்துவதா? என ஒரு சில கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பாக அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் தொடங்கிய இந்த போராட்டம் தற்போது அனைத்து கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடி தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை உறுதியாக கூறியுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் நேரடி தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்றும் ஆன்லைனில் இனி தேர்வுகள் நடத்துவது இல்லை என்றும் உயர்கல்வித்துறை திட்டவட்டமாக கூறியுள்ளதால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

seithichurul

Trending

Exit mobile version