தமிழ்நாடு
மீண்டும் தேர்வு: பிளஸ் 2 மறுதேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்?
![student exam5 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/student-exam5.jpg)
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை அடுத்து ஏராளமானோர் விண்ணப்பம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொத்தம் 23 பேர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு மறு தேர்வு ஆகஸ்ட் 9 முதல் 14ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று இன்று வெளியாகி உள்ளது என்பதும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு எழுதும் மாணவர்கள் மாஸ்க் அணிந்து அரசு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு தனிமனித இடைவெளியை பயன்படுத்தி தேர்வு எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் முதல்வருடன் கலந்து பேசி பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.