தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி விளையாட்டு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!

Published

on

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்த வழக்கின் தீர்ப்பு வெளியிடும் தேதி தற்போது வெளியாகியுள்ளது

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து ஜல்லி கேம்ஸ் ப்ளே கேம்ஸ் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தரும் அரசு, ஆன்லைன் விளையாட்டுக்கு மட்டும் தடை விதித்து சட்டம் இயற்றியது ஏன் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ள நிலையில் பொது நலனை கருத்தில் கொண்டு இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும் சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது

ஜல்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் தமிழக அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்ய கோரி வழக்கு தொடுத்து இருந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது

இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாக உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்கு மீண்டும் நீதிமன்றம் அனுமதி தருமா அல்லது ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை செய்யப்பட்டது சரியே என்ற தீர்ப்பை தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆன்லைன் ரம்மி, நீதிமன்றம், தீர்ப்பு,

Trending

Exit mobile version