தமிழ்நாடு
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி: முதல்வர் அறிவிப்புக்கு குவியும் வரவேற்பு!
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்புக்கு வரவேற்பு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபத்தில் சென்னையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததால் மனைவி மற்றும் மகன்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவிலேயே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் மேலும் கூறியபோது, ‘ஆன்லைன் சூதாட்டத்தை பொறுத்தவரை கடந்த ஆட்சியிலேயே தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் திருத்தச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி விட்டது.
ஆனாலும் அந்த தீர்ப்பின் மீது சட்ட ஆலோசனை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தடை செய்யக்கோரி இந்த அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது. வழக்கை பொறுத்த வரைக்கும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விசாரணை தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்திலேயே நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற உறுதியை இந்த சட்டமன்றத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.