இந்தியா
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் ’ஒன்ப்ளஸ் பே’ சேவை!
ஏற்கனவே இந்தியாவில் ’கூகுள் பே’ ’போன் பே’ ’வாட்ஸ் அப் பே’ உள்ளிட்ட சேவைகள் இருக்கும் நிலையில் தற்போது ’ஒன் பிளஸ் சேவை பே’ சேவை விரைவில் இந்தியாவில் வரும் என்று செய்திகள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கிகளில் பண மாற்றம் செய்வதற்கு முன்பெல்லாம் வங்கிகளுக்கு சென்று தான் பணபரிமாற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு ஆன்லைன் மூலம் பண பரிமாற்றம் செய்யும் வசதிகளை அனைத்து வங்கிகளும் ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்த நிலையில் தற்போது தனியார் நிறுவனங்களும் வங்கி பரிமாற்றத்திற்கான சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக கூகுள் நிறுவனம் வழங்கி வரும் கூகுள் பே’ என்ற சேவை மிகப் பெரிய அளவில் இந்தியாவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வாட்ஸ்அப் பே, போன் பே உள்ளிட்ட பல பணபரிமாற்ற சேவைகள் இந்தியாவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் செல்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும் ஒன் பிளஸ் நிறுவனமும் தற்போது இந்த வங்கி பணப்பரிமாற்ற சேவையை செய்ய திட்டமிட்டுள்ளது. ஒன் பிளஸ் நிறுவனம் மொபைல் பரிவர்த்தனை சேவையை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக டிரேட் மார்க் பெற விண்ணப்பித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒன்பிளஸ் பே சேவை விரைவில் பயனாளர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.