இந்தியா

கொரோனாவால் மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கு: எந்த நகரில் தெரியுமா?

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவியது என்பதும் அதன் பின் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு ஆறுமாதத்திற்கும் மேல் அமலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓரளவு ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்ட பின்னரே தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மீண்டும் கடந்த சில வாரங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக வேகமாக கொரோனா பரவி வருகிறது என்பதும் மகாராஷ்டிராவில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தினமும் 400 பேருக்கு மட்டுமே கொரோனா பரவிக்கொண்டிருந்த தமிழகத்தில் நேற்று 600 பேர்களுக்கு மேல் கொரோனா பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிவேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் என்ற நகரில் மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 முதல் 21 ஆம் தேதி வரை ஒரு வாரம் முழு ஊரடங்கு என்றும் கடந்த ஆண்டு முழு ஊரடங்கின்போது கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் அனைத்தும் இந்த ஒரு வாரத்துக்கு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாக்பூர் நகர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version