இந்தியா

மேலும் ஒரு மாநிலத்தில் பரவியது ஒமிக்ரான்: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!

Published

on

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் முன்பே ஒமிக்ரான் வைரஸ் ஏற்கனவே இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் பரவியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மாநிலத்தில் பரவி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் என்ற வைரஸ் ஹாங்காங், சிங்கப்பூர் சவுதி அரேபியா அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பரவி வருகிறது என்பதும் இதனால் உலக நாடுகள் மீண்டும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக தகவல் வெளியானது. கர்நாடக மாநிலத்தில் உள்ள இரண்டு பேருக்கும் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒருவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் கர்நாடகா, குஜராத் மாநிலங்களை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் வரும் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், அவர்கள் ஏழு நாட்களுக்குள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதன் பின்னரே அவர்கள் தங்களுடைய வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து தீவிரமான நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு ஒத்துழைப்பு தரும் என்றும் அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version