தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி: மதுரை மத்தி தொகுதி ஒதுக்கீடு!

Published

on

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்பட ஒருசில கட்சிகள் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு கட்சி இணைந்துள்ளது என்பதும் அந்த கட்சிக்கு அதிமுக தலைமை ஒரு தொகுதியை ஒதுக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் இணைந்து உள்ள பசும்பொன் தேசிய கழகம் என்ற கட்சியை மதுரை மத்தி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மத்தி தொகுதியில் பசும்பொன் தேசிய கழகம் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பசும்பொன் தேசிய கழகம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பசும்பொன் தேசிய கழகம் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் பசும்பொன் தேசிய மதுரை மத்தி என்ற சட்டமன்ற தொகுதி ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி பசும்பொன் தேசிய கழகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்’இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version