தமிழ்நாடு

அந்தமானில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

Published

on

சமீபத்தில் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை அடுத்து சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பதும் இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததை அடுத்து சென்னை மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தமிழகத்தில் இன்று முதல் ஒருசில மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி அந்தமானில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 13ஆம் தேதி அதாவது நாளை உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் நவம்பர் 14ஆம் தேதி நெல்லை குமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திங்கட்கிழமை உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version