தமிழ்நாடு
நாளை மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு: 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளதை அடுத்து 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காற்றழுத்த தாழ்வு உருவாகி அது மண்டலமாக உருமாறி சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது அந்தமான் பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்பதும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவாக இருப்பதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கரூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 19 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.