பிற விளையாட்டுகள்

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்: லவ்லினா அசத்தல்

Published

on

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்கனவே ஒரு வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளி பக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

கடந்த சில நாட்களாக டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு என்பவர் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி வென்றார். அதேபோல் பேட்மிட்டன் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா தற்போது வெள்ளி பதக்கத்தை வென்றதை அடுத்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை பிரிவில் 69 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிப் போட்டியில் துருக்கி வீராங்கனையுடன் லவ்லினா மோதினார். இந்த போட்டியில் திருப்பி வீராங்கனை சிறப்பாக விளையாடி 5-0 என்ற கணக்கில் லவ்லினாவை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதனையடுத்து அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும், லவ்லினாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளதை அடுத்து இந்தியாவுக்கு 3வது பதக்கம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version