உலகம்
கலை கண்காட்சியில் தற்செயலாக நடந்த விபத்து.. ரூ.34 லட்சம் மதிப்புடைய சிலை நொறுங்கியதால் பரபரப்பு..!
மியாமியில் நடைபெற்ற கலை கண்காட்சி ஒன்றில் தற்செயலாக நடந்த விபத்தில் அங்கிருந்த அரிய வகை கண்ணாடி சிலை ஒன்று விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மியாமி நகரில் கலை கண்காட்சி ஒன்று நடந்த நிலையில் அதில் புகழ்பெற்ற கலைஞரான ஜெஃப் கூன்ஸின் சிறிய கண்ணாடி சிற்பம் தவறுதலாக கீழே விழுந்து துண்டு துண்டாக நொறுங்கியது. பலூன் நாய் என்று கூறப்படும் இந்த நீல நிற கண்ணாடி சிற்பத்தின் மதிப்பு ரூபாய் 34 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த கண்காட்சியில் பல விஐபிகள் கலந்து கொண்டு அரிய பொக்கிஷங்களை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென பெண் ஒருவரின் கைபட்டு அந்த நாய் கண்ணாடி சிற்பம் கீழே விழுந்ததாக தெரிகிறது. ஆயிரக்கணக்கான துண்டுகளாக அந்த சிற்பம் நொறுங்கி விழுந்ததை அடுத்து அதை வடிவமைத்த கலைஞர் ஜெஃப் கூன்ஸ் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
இது ஒரு தற்செயலான விபத்து என்பதாலும் அந்த சிற்பத்திற்கு இன்சூரன்ஸ் போடப்பட்டிருந்தது என்பதாலும் அந்த பெண்ணுக்கு எந்தவிதமான பொருள் சேதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி இப்படி ஒரு சிற்பம் உடைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று அங்கிருந்த பலர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நொறுக்கப்பட்ட கண்ணாடி சிற்பம் 12 அடி உயரம் என்றும் இந்த நாய் சிற்பம் உலக புகழ் பெற்றது என்றும் ஏற்கனவே லாஸ்ட் ஏஞ்சல்ஸ் உட்பட ஒரு சில கண்காட்சிகளில் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
OH DAMN! ????????????????????
А balloon sculpture of famous artist Jeff Koons in the shape of a dog crashed at the Art Wynwood Fair in Miami. It was valued at $42,000, the Daily Mail.
????
It is specified that one of the collectors decided to check whether the work by Koons really lived up… https://t.co/J8QwVtQt2K pic.twitter.com/yJXi6sWuFq— TheRealBiffBifford ???????? (@TBifford) February 19, 2023