இந்தியா
புதுச்சேரியிலும் பரவிய ஓமிக்ரான்… 2 பேர் பாதிப்பு
கடந்த வருட துவக்கத்தில் சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதில், பலரும் பாதிக்கப்பட்டனர். சில லட்சம் பேர் உயிரும் இழந்தனர்.
தற்போது கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 400 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏற்கனவே ஒருவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சமீபத்தில் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில், தமிழகத்தின் அருகில் உள்ள புதுச்சேரியிலும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு பரவ துவங்கியுள்ளது. 80 வயது முதியவர் மற்றும் 20 வயது இளைஞர் என 2 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவரோடு தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த செய்தி புதுச்சேரி வாசிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.