Connect with us

உலகம்

ஓமிக்ரான் கொரோனா தொற்று அறிகுறிகள் சிறுவர்களிடம் அதிகம் காணப்படுகிறது?

Published

on

omicron

கொரோனா 3-ம் அலை வந்தால் அது தடுப்பூசி இல்லாத, சிறுவர் சிறுமிகளை அதிக அளவில் தாக்கும் என கூறப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அதிகளவில் ஓமிக்ரான் தொற்று அறிகுறிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இதுவரையில் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்படவில்லை. அதேநேரம் ஓமிக்ரான் சிறுவர்களை மட்டும் தான் அதிகம் தாக்குகிறது என்பதற்கான தரவுகளும் இல்லை.

இருந்தாலும் சிறுவர்களுக்கு வரும் ஓமிக்ரான் கொரோனா தொற்று அறிகுறிகள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

சிறுவர்களுக்குளுக்கு ஏற்படும் ஓமிக்ரான் கொரோனா தொற்று அறிகுறிகள்

பெரியவர்கள் மற்றும் வயதானவர்களைப் போன்று சிறுவர்களுக்கும் பல்வேறு கொரோனா தொற்று அறிகுறிகள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை எல்லோருக்கும் ஒன்றாகவே உள்ளது.

காய்ச்சல், சோர்வு, இருமல் மற்றும் வாசனை மற்றும் சுவை உணர்வு இழப்பு போன்றவை கொரோனா தொற்றின் பொதுவான அறிகுறிகள். அதுவே சிறுவர்களைத் தாக்கும் போது இதயம், நுரையீரல், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள், செரிமான அமைப்பு, மூளை, தோல் அல்லது கண்கள் உட்பட உடலின் பல்வேறு உறுப்புகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

ஓமிக்ரான் தொற்றைப் பொறுத்த வரையில், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு க்ரூப் எனப்படும் கடுமையான, குரைக்கும் இருமலுக்கு வழிவகுக்கலாம் என சமீபத்திய ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.

ஓமிக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் சிறுவர்கள் நெருக்கமாக இருந்து தொற்று பாதிப்பு ஏற்பட்டால், மேல் சுவாசக் குழாயில் தொற்று ஏற்பட்டு குரூப்புக்கு வழிவகுக்கிறது என கூறுகின்றனர்.

அமெரிக்காவில் அதிகளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள்

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அதிகளவில் கொரொணா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்ற ஒரு நிலை தென் ஆப்ரிக்காவிலும் ஓமிக்ரான் அதிகளவிலிருந்த போது ஏற்பட்டுள்ளது. ஆனால் டெல்டா தொற்றை விட ஓமிக்ரான் தொற்றின் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
வணிகம்6 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா8 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!