உலகம்
உள் நாட்டவர்களை பணியில் அமர்த்த சொல்லிய ஓமன் அரசு.. NRI-கள் அதிர்ச்சி!
![OMAN - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/05/OMAN.jpg)
கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டில் உள்ளவர்கள் பலர் தங்களது சொந்த நாடுகளுக்குச் செல்வதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ள ஓமன் அரசு வெளிநாட்டினரை நீக்கி உள் நாட்டினரை பணியில் அமர்த்த சொல்லி உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டினரை நீக்கி உள் நாட்டினரை பணியில் அமர்த்துவதன் மூலம், உள் நாட்டவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று ஓமன் அரசு எண்ணுகிறது.
ஓமனியசேஷன் என்ற கொள்கை அறிவிப்பை வெளியிட்டுள்ள ஓமன் அரசு தரமான வேலைகளில் நமது குடிமக்கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
48.3 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஓமனில், மூன்றுக்கு ஒரு பங்குக்கு அதிகமாக வெளிநாட்டவர்கள் உள்ளனர். அதிலும் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.