பிற விளையாட்டுகள்

வெள்ளி வென்ற மீராபாய்க்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு: எப்படி தெரியுமா?

Published

on

ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பதையும் பார்த்தோம்.

அதேபோல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல மாநில முதல்வர்களும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இப்போதுவரை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் ஒரே வீராங்கனை ஒரே வீராங்கனை மீராபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்த மீராபாய்க்கு தற்போது தங்கப் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மீராபாய் வெள்ளி வென்ற இதே பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சீனாவின் ஹோ சிஹூய் என்பவர் தற்போது ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

சீன வீராங்கனை ஹோ சிஹூய் ஊக்கமருந்து செலுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் நான்காவது இடம் பிடித்த வீராங்கனைக்கு வெண்கலப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஊக்கமருந்து சோதனையின் முடிவு இன்னும் ஒரு சில நாட்களில் வந்துவிடும் என்றும் அதன் பின்னர் ஒலிம்பிக் நிர்வாகிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version