விளையாட்டு

பண மழையில் ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ரா- கோடி கோடியாகக் குவியும் பரிசுகள்

Published

on

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற நீராஜ் சோப்ராவுக்குப் பரிசு மழையாக கோடி கோடியாகப் பணம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

டோக்கியோவில் தற்போது நிறைவடைந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்து இருப்பதால் மத்திய அரசு, மாநில அரசுகள், தனியார் அமைப்புகள் எனப் பலரும் கோடி கோடியாகப் பணத்தை பரிசாகத் தருவதாக அறிவித்து வருகின்றன.

ஹரியாணாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ராவுக்கு ஹரியாணா முதல்வர் 6 கோடி ரூபாயை பரிசாக அளித்துள்ளார். மேலும், இந்தியக் கிரிக்கெட் வாரியாமான பிசிசிஐ 1 கோடி ரூபாய், பஞ்சாப் அரசு 2 கோடி ரூபாய், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 கோடி ரூபாய், மஹிந்திரா நிறுவனர் ஆனந்த மஹிந்திரா சார்பில் ஒரு எக்ஸ்யூவி 700 கார், மணிப்பூர் அரசு 1 கோடி ரூபாய், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் 1 ஆண்டுக்கான இலவச பயணம், பைஜூஸ் நிறுவனம் 2 கோடி ரூபாய் என கோடிகளிலேயே அத்தனைப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version