தமிழ்நாடு

திமுக கூட்டத்தில் ஸ்டாலினை நோக்கி ஓடி வந்த மூதாட்டியால் பரபரப்பு!

Published

on

சென்னையில் திமுகவின் வார்டு சபை கூட்டத்தில் ஸ்டாலினை நோக்கி வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ராயபுரத்தில் திமுக சார்பில் வார்டு சபை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக அரசை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசிக் கொண்டிருந்தார். பின்பு அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர் வேகமாக ஸ்டாலினை நோக்கி நடந்து வந்தார். இதனைக் கண்ட மூதாட்டியை அமரும்படி அங்கிருந்த திமுகவினர் கூச்சலிட்டனர். அதைக் கண்டுகொள்ளாமல், நேராக ஸ்டாலினை நோக்கி மூதாட்டி சென்றார்.

பின்னர் 2 நிமிடம் ஏதோ பேசிவிட்டு, எதையோ சாதிததார் போல திரும்பி வந்தார். பக்கத்தில் யாரும் இல்லாததால் இருவரும் என்ன பேசினார்க் என்று தெரியவில்லை.

அதன்பிறக அந்த மூதாட்டியை தனியே விசாரித்த போது, முதியோருக்கான உதவித்தொகை தனக்கு கிடைக்கவில்லை என்றும், அதுதொடர்பாக ஸ்டாலினிடம் புகார் அளித்தாகவும் தெரிவித்தார். ஸ்டாலினும் அதனை ஏற்று திமுக சார்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாகவும் தெரிவித்தார். திமுகவின் வார்டு சபை கூட்டத்தில் மூதாட்டியின் இந்த பரபர செயலால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Trending

Exit mobile version