தமிழ்நாடு

12 வயது சிறுமியை சீரழித்த 72 வயது முதியவர் உள்ளிட்ட மூவர்!

Published

on

சென்னையில் 12 வயது பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 72 வயது முதியவர் உள்ளிட்ட மூவரை போலிசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சென்னை கொருக்குப்பேட்டை பாரதியார் நகர் குடியிருப்பு பகுதியில் தந்தையை பிரிந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 7-ஆம் வகுப்பு மாணவி சற்று மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டியூசனுக்கு சென்ற அந்த 12 வயதான மாணவியை அப்பகுதியை சேர்ந்த 72 வயதான முதியவர் உள்ளிட்ட மூவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல அமைப்பினர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 72 வயது முதியவர் ரத்தினம் மற்றும் கூலித்தொழிலாளிகள் லட்சுமனன், ராஜா ஆகிய மூவரையும் போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சமீபத்தில் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் 12 வயது சிறுமியை முதியவர் உள்ளிட்ட மூவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது மேலும் அதிர்ச்சியாக உள்ளது.

Trending

Exit mobile version