தமிழ்நாடு

பஞ்சுமிட்டாய் தருவதாக கூறி 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்!

Published

on

திருப்பத்தூர் அருகே பஞ்சுமிட்டாய் வியாபாரம் செய்யும் 54 வயதான முதியவர் ஒருவர் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததால் அவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் அருகே பாரண்டபள்ளி பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சான்பாஷா என்பவர். பஞ்சுமிட்டாய் வியாபாரம் செய்து வரும் இவரது வீட்டின் அருகில் நேற்று மாலை அந்த பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள்.

அப்போது அந்த குழந்தைக்கு அருகில் சென்ற முதியவர் சான்பாஷா உனக்கு பஞ்சுமிட்டாய் தருகிறேன் வா என்று அழைத்துள்ளார். பின்னர் அருகில் உள்ள தனது வீட்டிற்குள் அந்த பெண் குழந்தையை அழைத்துச் சென்று பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து அந்த குழந்தை கூச்சலிட்டது.

குழந்தையின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் பஞ்சுமிட்டாய் வியாபாரம் செய்யும் முதியவர் சான்பாஷாவை பிடித்து தர்ம அடி கொடுத்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போஸ்கோ சட்டத்தின் கீழ் முதியவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல்துறையினர்.

seithichurul

Trending

Exit mobile version