தமிழ்நாடு
அரிசியில் புழுக்கள்.. கிழிந்த துணிகள்.. அரசு இதுக்கு நிவாரணம் கொடுக்காமலே இருக்கலாம்!
மன்னார்குடி: கஜா புயல் நிவாரணத்திற்காக அரசு உருவாக்கி உள்ள முகாம்களில் கொடுக்கப்படும் அரிசிகளில் புழுக்கள் இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கஜா புயல் மொத்தமாக புரட்டி போட்டு உள்ளது. மக்கள் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், கும்பகோணம், மயிலாடுதுறை, முத்துப்பேட்டை, புதுக்கோட்டை மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அரசு ஏற்பாடு செய்திருக்கும் பல கஜா புயல் நிவாரண முகாம்களில் மிக மோசமான நிலையிலேயே துணிகள் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட போர்வைகள் கிழிந்து, பூஞ்சைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த கஜா புயல் பெரிய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது இன்னும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.