வணிகம்
ரூ.2,400 கோடி ரூபாய் முதலீடு.. தமிழகத்தில் உலகின் மிகப் பெரிய ஸ்கூட்டர் ஆலை.. ஓலா அதிரடி!
இந்தியாவின் மிகப் பெரிய செயலி டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா, தமிழகத்தில் உலகின் மிகப் பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி 2,400 கோடி ரூபாய் முதலீட்டை ஓலா தமிழகத்தில் செய்கிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் ஆலையில் ஆண்டுக்கு 2 மில்லியன் வாகனங்கள் தயாரிக்க ஓலா முடிவு செய்துள்ளது.
இதனால் 10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழகத்தில் தயாரிக்கப்படும் இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் இந்திய போக்குவரத்து சந்தையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஐரோப்பியா, ஆசியா மற்றும் லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட பிற சந்தைகளுக்கு விற்பனைக்கு வரும் என்று ஓலா தெரிவித்துள்ளது.