தமிழ்நாடு

சென்னை, அண்ணா சாலையில் ‘Ola, Uber’ டாக்சி டிரைவர்கள் காரை நிறுத்தி திடீர் போராட்டம்!

Published

on

சென்னையின் மிகவும் அதிக வாகனங்கள் செல்லும் அண்ணா சாலையில், இன்று ஓலா மற்றும் உபெர் நிறுவனங்களில் பணிபுரியும் கால் டாக்சி டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் கார்களை நிறுத்திவிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓலா, ஊபர் நிறுவனங்கள் தங்களிடம் வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களையும் டாக்ஸி ஓனர்களையும் வஞ்சிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழ்நாடு, இந்த விவகாரத்தில் தலையிட்டு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும், தங்களின் நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.

கார்களை அண்ணா சாலையில் நிறுத்தி விட்டு சாவிகளை எடுத்து சென்றதால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கார்களை நிறுத்தியதால் போக்குவரத்தில் ஸ்தம்பித்த அண்ணா சாலை:

author avatar
seithichurul

Trending

Exit mobile version