தமிழ்நாடு
தானாக தீப்பிடிக்கும் முன் ஓலா ஸ்கூட்டர் ஓனரே தீ வைத்த அதிர்ச்சி சம்பவம்!
ஓலா உட்பட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து எரிவதாக கூறப்படும் நிலையில் தானாக தீப்பிடிக்கும் முன்பு அந்த ஸ்கூட்டரை வாங்கிய உரிமையாளரே தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் என்ற பகுதியில் பிசியோதெரபி மருத்துவர் ஒருவர் சமீபத்தில் ஓலா ஸ்கூட்டரை வாங்கினார். அந்த ஸ்கூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆனதாஅல் ஆத்திரமடைந்த அவர் சர்வீஸ் செண்டருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது .
ஏற்கனவே 3 முறை பழுதாகி அதை சர்வீஸ் செய்த தூத்துக்குடி மருத்துவர் பிரித்திவிராஜ் மீண்டும் பழுதானதால் ஆத்திரம் அடைந்தார், அதுமட்டுமின்றி முழு சார்ஜ் போட்டு விட்டு வாகனத்தை ஓட்டி சென்ற நிலையில் வழியில் பேட்டரி தீர்ந்து விட்டதால் நின்று விட்டதாகவும் கூறப்படுகிறது .
இதுகுறித்து பலமுறை ஓலா சர்வீஸ் செண்டரிடம் புகார் அளித்த போதும் எந்தவிதமான ரெஸ்பான்ஸ் இல்லாததால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த ஸ்கூட்டரை சாலையில் வைத்து தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.